Monday, October 31, 2011

5 நிமிட சிரிப்புக்கு நான் உத்திரவாதம் நண்பர்களே

,
அன்பான கணவன் 


ஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆ.கோ. வில் ஒரு எழுத்து மாற்றி (சேருமிட முகவரியை) அடித்து விட்டான்..!

வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் உள் பெட்டியைத் திறந்தாள்..சிறிது நேரத்தில்..

" சக்கரம்" என்று கத்தியவாறு மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்த்தது..!

TO ----------என் அன்பான மனைவி

SUBJECT------ வந்து சேர்ந்துவிட்டேன்..

TIME---------- மர்ச்சுவரி 32/ 2000 ... 9.00 pm.

அன்பே..

அதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னுடைய பயணம் அற்புதமாக இருந்த்து. இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.

அப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம். உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.

உன் வரவை எதிர் நோக்கி..

உன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




மொக்கை சொர்க்கத்தின் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

வாழ்க்கையில் ஒரு நல்ல காரியமாவது செய்தவர்களுக்கே இந்த வாயில் திறக்கும் என்று காவலன் கூற, காத்திருந்தவர்கள் அனைவரும் ஒரு நன்மை சம்பவ்த்தைச் சொல்லி உள்ளே நுழைந்தனர். இறுதியாக நம் மொக்கையின் முறை..

நான் புறநகர்ப் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, 6 தடியர்கள் ஒரு இளம்பெண்ணைக் கடத்திவந்து வம்பு செய்வதைப் பார்த்தேன். வண்டியை நிறுத்திவிட்டு, சாலையில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்தேன். அவர்களில் தலைவன் போன்ற ஒருவன் இருந்தான்.. ஆறரை அடி உயரம்.. வெயிட் லிப்ட்டர் போல இருந்தான். புருவத்துல ஒரு வளையம் மாட்டி இருந்தான். முகத்தில் வெட்டுக்காயம் வேறு.. அவன்பிடியில்தான் அந்தப்பெண் தவித்துக்கொண்டிருந்தாள்..

நான் போய் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினேன்.. மற்றவர்கள் என்னை ரவுண்டு கட்டினார்கள். நான் அஞ்சவேயில்லை. அவன் புருவ வளையத்தைப் பிடுங்கிப் போட்டேன். உருட்டுக்கட்டையால் அவன் தலையில் 4 போடு போட்டேன்.. மற்றவர்களைப்பார்த்து மிரட்டினேன்..

"ஒழுங்கா ஓடிப்போயிருங்க.. இல்லே இவன்கதிதான் உங்களுக்கும்..!

திருப்தியுற்ற சொர்க்க வாயிலோன் கேட்டான்..

அடடே.. நல்ல வேலை செஞ்சிருக்கீங்க.. சரி.. அந்தச் சம்பவம் எப்போ நடந்துச்சு..?

இப்போதான்.. 3 நிமிஷத்துக்கு முந்தி..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இப்ப சிரிக்காம இருங்க பார்க்கலாம்



அந்த ஊரில் பிரபல சர்க்கஸ் ஒன்று முகாமிட்டது.

கூடாரங்களை நிர்மாணிக்கும் வேலைக்கு உள்ளூர் ஆட்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தனர். உள்ளூர் ஆட்களில் நம் மொக்கையும், பாணியும் இருந்தனர்.

தரையில் பெரும் முளைகளை அடித்து, அவற்றில் கூடாரக் கயிறுகளை இழுத்துக்கட்டும் பொறுப்பு மொக்கை, பாணி இருவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. சர்க்கஸ் முதலாளி வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்று மேற்பார்வையிட்டு சுற்றிவந்தார்.

ஒரு இடத்தில், மொக்கை மட்டும் வேலை செய்யாமல், சர்க்கஸ் வீரர்களைப் போல பல்டி அடிப்பதும், ஒற்றைக்காலில் நின்றபடி பேலன்ஸ் செய்து உடலை வளைப்பதுமாக செய்துகொண்டிருந்தார்.

மொக்கையின் இத்திறமையால் பெரிதும் கவரப்பட்ட சர்க்கஸ் முதலாளி, அவரை தன் நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள விரும்பினார். அவரது நண்பனான பாணியிடம் விசாரித்தார்..

உன் நண்பனா அவன்..? அவனிடம் உள்ள திறமைக்கு எங்கள் கம்பெனியில் சேர்ந்தால் ஒரு காட்சிக்கு 200 ரூபாய் தருவேன். ஒருநாளில் 3 காட்சிகள் கூட நடக்கும். கொஞ்சம் கேட்டுச் சொல்கிறாயா..?

ம்ம் .. நல்ல திட்டமாத்தான் தெரியுது.. அவன் ஒத்துப்பானோ மாட்டானோ.. இருங்க .. அவன்ட்டயே கேக்கறேன்.. "எலே மொக்கை.. இவரு 600 ரூபாய் தராராம்.. இப்போ செஞ்சதுபோல, தினமும் 3 தடவை சம்மட்டியால உன் கால் கட்டைவிரலை அடிச்சு நச்சுக்கிக்கிறியாலே..?!!!!

நன்றி : http://www.livingextra.com
மேலும் படிக்க...

Monday, October 24, 2011

தமிழ் மற்றும் தமிழிரின் தனிச்சிறப்புகள்

,
செம்மொழிக்கு இருக்கவேண்டிய பண்புகள்

 1. தொன்மை
 2. தனித்தன்மை
 3. பொதுமைப்பண்பு
 4. நடுவுநிலைமை
 5. தாய்மைப்பண்பு
 6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவு வெளிப்பாடு
 7. இலக்கியவளம்
 8. பிறமொழித் தாக்கமில்லாப் பண்பு
 9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு

[ நன்றி: பூர்வீகா calender]

இவ்வளவு பெருமை வாய்ந்த தமிழ் மொழியினை tamil-என்று Google image-இல் தேடினால் போக்கிரி விஜய் படம் தான் முதலில் வருகிறது.
மேலும் படிக்க...

Wednesday, October 19, 2011

பணம் பண்ணலாம் பணம்

,
தோழர்களே நம்மில் பல பேருக்கு இன்டெர்நெட்-இல் பணம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது adsense மட்டும் தான், ஆனால் பணம் பண்ணுவதற்கு கடல் போல company-கள் குவிந்து கிடக்கின்றன. அதில் சில கீலே காணொளி-இல் காணுங்கள்,


இந்த வீடியோ மிகவும் பழையது. சும்மா என்ன என்று தெரிந்து கொண்டால் மட்டும் போதுமானது. விரைவில் தமிழில் காணொளி -ஐ நம் தளத்தில் காணலாம்.

இதையும் படிங்க



மேலும் படிக்க...

Tuesday, October 18, 2011

சென்னைல வேலை வேணுமா? ஒரு கலக்கல் ரிபோர்ட்

,
நீங்க பொறியியல் முடித்து விட்டு வேலை தேட சென்னைக்கு கிளம்புபவரா?

முதலில் சென்னையில் எந்தெந்த கம்பெனி எங்கெங்க இருக்குனு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, job consultancy எங்கெங்க இருக்குனு தெரிஞ்சுக்கோங்க, ஏன்னா நீங்க என்னதான் internet-ல தேடி போனாலும் பேப்பர்ல விளம்பரம் பார்த்து போனாலும் சரி நீங்க போய் முட்டி நிக்க போறது ஒரு கன்ஸல்டன்ஸி-ல தான், இல்லனா ஏதாவது training institute-ல போய் நிப்பீங்க.

consultancy- முதல்ல ஒரு 2000 ரூபா கட்டுங்க இன்டர்வியூ ஆரம்பிச்சுரலாம்-னு  சொல்வாங்க (அவங்கள அப்படி சொல்ல வைக்க மோதல்லயே 50 தோ இல்ல 100 ஓ கட்டனும் அப்பதான் உள்ளயே விடுவாங்க). இல்லனா நிறைய பேர் கைல offer லெட்டர் வாங்கிட்டு காசு கொடுத்த பொதும்னு சொல்வாங்க. வேலையும் கிடைக்கும் ஆனா அடுத்த ஆறே மாசத்துல கம்பெனி-ல இருந்து வெளிய அனுப்பிருவாங்க [அது எப்படினா, அங்க வேலை செயுற HR இவன் friend-ஆ இருப்பான்].

உஷார் இளைஞர்களே...


[நிறைய நல்ல consultancy-யும் இருக்கு]

ஆனா இன்னைக்கு தேதில BPO's நெறைய வேலைக்கு ஆள் எடுக்கராங்க, ஒருதடவ நீங்க BPO போகணும்னு முடிவு பண்ணிட்டா MNC BPO-க்கு மட்டும் போங்க. லோக்கல் வேண்டாம்.

நீங்க ECE முடிச்சுட்டு வேலை தேடுனா உங்கள விட பாவம் செஞ்சவங்க யாரும் இருக்க மாட்டாங்க [தீயா தேடனும் பாசு]...

தாம்பரத்துல MEPZ-sanitorium ல தினமும் இன்டர்வியூ நடக்கும் (monday to friday Diploma holders, Saturday only for Engineering Graduates) கம்பெனி பேரு Avalon technologies (I think Semiconductor manufacturers) முயற்சி பன்னித்தான் பாருங்களேன்..

உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சு இருந்தா தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள் யாராவது ஒருவர் வாழ்வில் விளக்கேற்றிய பெருமை உங்களை சேரும்.

இதையும் படிங்க

வேண்டாம் backlinks 


மேலும் படிக்க...

Monday, October 17, 2011

நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு மற்றும் துணுக்கு

,
நண்பர்களே இனிமேல் இடுக்கை இடுதுவதாயினும் சரி, comment இடுதுவதாயினும் சரி உங்களை பேராண்டி, பேத்தி என்று விழிக்க ஆசைப்படுகிறேன்.

அப்படி அழைக்கலாமா?

இன்றைய விஷயம் இதுதான் என்றாலும் இவ்வளவு சின்ன இடுக்கை இட என் மனம் இடம் தரவில்லை, ஆகவே சில பிளாக் துணுக்குகள்,

1) சில தர்ட் பார்ட்டி template-களில் adsense என்ற gadget இருக்கும், அதை நாம் மாற்றவோ அழிக்கவோ முடியாது. அதை எப்படி அழிப்பது என்று இப்போது காணலாம்.


முதலில் design- Edit HTML சென்று பேக்அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின் ctrl+f அழுத்தி adsense என்ற code-ஐ தேடவும். பின்னர் அதில் locked= 'true' என்று இருக்கும்,அதை false என்று மாற்றி விடுங்கள், அவ்வளவு தான் இப்போது page elements வந்து சுலபமாக அதனை remove செய்து விடலாம். (கவனிக்க- advanced பிளாக்கர்கள் edit HTML -லேயே இதனை remove செய்யலாம்)

மேலும் கவனிக்க- அனைத்து widget-க்கும் இதே tricks தான் பேராண்டி..
மேலும் படிக்க...

Saturday, October 15, 2011

இன்று மூளைக்கு கொடுத்த வேலை

,
1. நண்பரே இன்று நான் என் தளத்தில் புதிகாக hitcounter இணைத்துள்ளேன். அதற்காக நான் http://www.histats.com என்ற தளத்தில் பதிவு செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் terms of service படித்து பார்த்தேன், அதில் "நீங்கள் எடுக்கப்போகும் HTML code-ஐ உங்கள் தளத்தில் paste செய்யும் வரை edit செய்ய கூடாது" என்று போட்டிருந்தது.

நானும் அந்த code-ஐ என் தளத்தில் edit செய்யாமல் paste செய்து விட்டேன், அதன் பின் அப்படியே save செய்து விட்டு மறுமுறை page element-க்கு வரும்போது தான் அதை edit செய்து மாற்றினேன். தமிழன்னா சும்மாவா...

நீங்களே சொல்லுங்கள் நான் செய்தது தவறா?

2. இன்று நான் இலவசமாக (தமிழக அரசுக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை) .tk domain register செய்து உள்ளேன், மற்ற தளத்திற்கு எப்படியோ, தமிழ்கிழம் தளத்திற்கு அந்த domain வெகுவாக பொருந்தியுள்ளது (TamilKizham).

tamilkizham.tk  எப்புடி.

அந்த டொமைன் registrar அந்த company-இன் favicon என்னுடைய blog-இல் வருமாறு செய்து விட்டார்கர், பிறகு உட்கார்ந்து அதையும் மாற்றினேன்..

UPDATE :

நண்பா முதலில் உங்கள் favicon -ஐ டிசைன் செய்து hosting (http://tinypic.com) தளம் ஏதிலாவது ஏற்றி விடவும். பின் அதன் URL-ஐ copy செய்து

<link href='url இங்கு paste செய்யவும்' rel='shortcut icon' type='image/x-icon'/>

<link href='url இங்கும் paste செய்யவும்' rel='icon' type='image/x-icon'/>
 பின் வழக்கம் போல edit HTML-க்கு சென்று </head> -க்கு முன்னால் சேர்த்து விடவும்..
மேலும் படிக்க...

Adsense approval rejected? கவலையை விடுங்கள்

,
என்னதான் என்னுடைய பழைய பதிவை பார்த்து chitika-க்கு signup செய்து இருந்தாலும், adsense approval வாங்குவது மட்டும் தான் நம்முடைய முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இங்கே காண்போம்.

முதலில் என்ன கரணத்துக்காக உங்கள் approval reject ஆனது என்று ஆராய்ந்து பாருங்கள். Not enough content or traffic என்று இருந்தால் அதற்கேற்றவாறு நாம் சில பல tricks செய்ய வேண்டி இருக்கும். Traffic-ஐ improve செய்ய freebacklinktool.com உபயோகப்படும் (நான் அதைத்தான் பயன்படுதுகிறேன் உங்கள் பரிந்துரையை comment-இல் சொல்லவும்).

நீங்கள் என்ன template பயன்படுத்துறீர்கள், blogger powered -ஆக இருப்பின் முதலில் அதை மாற்றுங்கள் http://www.premiumbloggertemplates.com-இல் நல்ல நல்ல template இலவசகமாக கிடைக்கிறது, அதுபோக அந்த template-இல் எந்த doubt வந்தாலும் நீங்கள் என்னிடம் கேட்கலாம்.

இவை அனைத்தையும் விட கொடுமை எல்லாமே சரியாக இருந்தும் approval reject (Difficult Site Navigation) ஆவது, அது ஏன் என்று பார்ப்பதை விட அதை எப்படி சமாளிப்பது என்று பார்போம்.

அப்படி உங்கள் application reject ஆகி இருந்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அதே mail கணக்கு மூலம் இன்னொரு blog துவங்க வேண்டும் (Custom Domain வாங்கிக்கொள்வது மிகவும் சிறப்பு). பின் பழைய blog dashboard-கு சென்று settings->export blog செய்யவும். இப்போது புது பிளாக்-இல் இதே போல் செய்து import blog செய்து கொள்ளவும். ஆனால் publish செய்ய வேண்டாம். இப்போது edit post சென்று மிகவும் நல்ல பதிவு என்று உங்களுக்கு தோன்றுவதை மட்டும் publish செய்து கொள்ளவும்.

அவ்வளவுதான் இனி உங்கள் blog traffic குறைந்தது 300-ஐ தொடும் வரை காத்திருக்கவும். அதன் பின் மீண்டும் adsense-இக்கு apply செய்யுங்கள். approval கிடைத்ததும் பழைய blog-இல் பயன்படுத்திக்கொள்ளலாம்.


.......இதுவும் என்னோடதுதாங்கோ ......

மேலும் படிக்க...

Thursday, October 13, 2011

காலத்தால் அழியாத blog

,
அனைத்து பதிவர்களுக்கும் நமது blog என்றுமே அழியாது இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அப்படி ஒரு blog சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும் என்று இப்போது பார்போம்.

முதலில் உங்கள் blog-ல் என்ன தகவல் பதிவு செய்ய போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளவும். blogger tips என்றுமே கை கொடுக்கும், ஏனென்றால் blogger உலகிலயே தர வரிசை பட்டியலில் 7-ஆம் இடத்தில் உள்ள தளமாகும். நாளுக்கு நாள் blogger-கள் அதிகம் ஆவார்களே தவிர குறைய மாட்டார்கள், அது போக, blogger template எப்போதும் HTML ஆகவே இருக்கும்.

பலமுறை நீங்கள் template-ஐ edit செய்து அப்டேட் செய்து கொண்டே இருந்தால், நாளடைவில் template உங்களுக்கு அத்துப்படி ஆகிவிடும்.

உங்கள் blog என்றும் நிலைத்து நிற்க அதன் முகவரி மிகவும் முக்கிய பங்கு வகிக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு அமெரிக்கனாக இருந்தால் உங்களுக்கு தேவையான தகவலை google search box-இல் எவ்வாறு தேடுவீர்கள் என்பதை நினைவில் நிறுத்தவும்.

ஏற்கனவே நீங்கள் வலைப்பூ வைத்திருந்தால் அதன் முகவரியை மாற்ற விருப்பம் இல்லை என்றால், உங்கள் post-இல் கவனம் செலுத்த வேண்டும், உதாரணத்துக்கு உங்கள் பதிவு adsense tips பற்றியதாக இருந்தால், பதிவின் தலைப்பை adsense application got rejected என்பது போல கொடுத்தால், இந்தியா, பாகிஸ்தான், சைனா, போன்ற நாடுகளில் இருந்து நிறைய traffic வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த 3 நாடுகளில் தான் adsense application வெகுவாக reject ஆகிறது, அதுவே how to increase (or double) adsense revenue போன்ற தலைப்புகள் international traffic-ற்கு வழி வகுக்கும்.

புதிதாக வலைப்பூ துவங்கும் பட்சத்தில், சம்பாதிக்க எண்ணம் இருந்தால் chitika ad-க்கு monitize செய்து கொள்ளலாம், ஏனெனில் adsense approval வாங்க உங்கள் தளத்திற்க்கு குறைந்த பட்சம் 6 மாதம் ஆகி இருக்க வேண்டும். அதுவரை இந்த தளம் உங்களுக்கு உதவும். அதுபோக உங்கள் தளத்திற்கு புதிய வாசகர்கள் தான் வருவார்கள், இந்த தளம் search இஞ்ஜின் மூலம் வரும் international வாசகர்களுக்கு மட்டும் தான் விளம்பரம் காட்டும்.

தற்போது வலை தளம் துவங்கியவர்கள், ஒரு வலைதளத்தை main ஆக வைத்து கொண்டு, மேலும் இரண்டு அல்லது மூன்று (dummy)தளம் கட்டாயமாக துவங்கி வையுங்கள்,பின்னாளில் ஒரு தளத்திற்கு adsense வாங்க முடியவில்லை என்றால் மற்ற தளத்திற்கு முயற்சி செய்யலாம். அதுவரை பேருக்கு 1 அல்லது இரண்டு போஸ்ட் வைத்து இருந்தாலே போதும் அல்லது உங்கள் விருப்பம். மேலும் புதிய google கணக்கு மூலம் (dummy) தளத்தை துவங்கினால் ஆறு மாதம் கழித்து புதிதாக blog ஆரம்பிப்பவர்களுக்கு விற்று விடலாம்.
மேலும் படிக்க...

Wednesday, October 12, 2011

Adsense approval கிடைக்கவில்லயா? கவலையை விடுங்கள்

,
நம்மில் பல பதிவர்கள் adsense-கு விண்ணபித்து விட்டு application reject ஆனவுடன் குய்யோ முறையோ என்று புலம்பிக்கொண்டிருப்போம். நானும் நேற்று வரை அப்படிதான் இருந்தேன். என்னுடைய ஆங்கில தளத்திற்கு பல முறை adsense அப்ளைசெய்து வெறுத்து விட்டேன். இத்தனைக்கும் அந்த தளத்தில் ஓரளவுக்கு நல்ல International traffic உண்டு.

 இப்படியே எத்தனை நாளைக்கு தான் இருப்பது என்று யோசிதுக்கொண்டிருந்த வேளையில் தான் எனது நண்பர் krishna prabhu மூலமாக Chitika தளம் பற்றி தெரிய வந்தது. சரி என்னதான் இருக்கிறது என்று பார்போம் என அந்த தளத்திற்கு சென்று என்னுடைய தமிழ் தளத்திற்கு விண்ணப்பிதேன், ஆனால் சரியாக 5.00 மணி நேரத்தில் என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

பின் சரி பாதி கிணறு தாண்டி விட்டோம் அப்படியே ஆங்கில தளதிற்கும் முயற்சி செய்து பார்போம் என்று எண்ணி விண்ணபித்தேன், மிகச்சரியாக அடுத்த 8.00 நிமிடத்தில் எனக்கு approval கிடைத்து விட்டது. சற்று பொறுங்கள் நண்பரே உடனே என்னுடைய ஆங்கில தளத்தை சொடுக்கி பார்க்க வேண்டாம், முழுவதும் படியுங்கள்.

Chitika தளம் பற்றி..


என்னதான் India முழுவதும் உங்களுக்கு வாசகர்கள் இருந்தாலும், அதனால் Chitika விளம்பரதிற்கு ஒரு உபயோகமும் இல்லை, வேறு எந்த நாட்டில் தான் வேண்டும் என்றால் ,  USA, Canada, UK, France, Sweden, Germany, Denmark, Australia, New Zealand, Belgium, Italy, Netherlands, and Spain (மேலும் நீட்டிக்கபடலாம்).


ஆங்கில தளம் வைத்திருபவர்கள், வெறுமனே adsense-காக காத்திருப்பதிற்கு பதில் இதை முயற்சி செய்யலாம். மேலும் இந்த Chitika வசதியை adsense active-ஆக இருக்கும் தளத்திலும் ஆக்டிவேட் செய்யலாம், அதுபோக adsense போல மிகவும் கட்டுப்பாடு கிடையாது. தளத்தை சும்மா போட்டு வைப்பதற்கு இது எவ்வளோ பரவாயில்லை. மேலும் நான் கூகிள்-ல் சொடுக்கிய வரை இதை பற்றி நல்லதாகத்தான் நிறைய பார்த்தேன்.


இந்த தளம் pay-per-click  மட்டுமல்லது மேலும் பல வசதிகள் தருகிறது.


இப்போதே முயற்சி செய்து பாருங்கள்...


பின்குறிப்பு: இந்த பதிவை, இதில் உள்ள link -குகளை மாற்றாமல், (என்னிடம் ஒருமுறை tamilkizham@gmail.com -இல் சொல்லிவிட்டு) எங்கு வேண்டுமானாலும் மீள்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க...

குழந்தை அழுகை-யை நிறுத்த

,
சிலசமயம் உங்கள் குழந்தை ஏன் அழுகிறது என்று தெரியவே தெரியாது. நீங்களும் பால்புட்டியை கொடுத்து பார்பீர்கள், பாட்டு பாடி பார்பீர்கள், ஏன் பல்ட்டி கூட அடித்து காண்பிப்பீர்கள், ஆனால் அழுகை நின்ற பாடு இருக்காது.

அந்த மாதிரி சமயத்தில், குழந்தையின் அழுகையை அழகாக உங்கள் செல்போன்-ல் பதிவு செய்து குழந்தைக்கு போட்டு காட்டவும். இப்போது குழந்தை கப்சிப் என்று இருக்கும்.

குழந்தை கட்டுப்படுத்துவது என்பது என்றுமே மலை போன்ற காரியமாகும், அப்படி இருக்கையில், நீங்கள் வாங்கி வைத்திருக்கும் மருந்துக்கள் நிறைந்த டப்பா அல்லது டானிக் ஆகிவற்றை என்னதான் குழந்தைக்கு எட்டாமல் வைத்தாலும், அதில் ஒரு அழுமூஞ்சி பாப்பா போட்டோ-வை ஒட்டி  வைத்தால், அந்த டப்பா தவறி கீழே விழுந்திருந்தாலும் குழந்தை அதை எடுக்காது.
மேலும் படிக்க...

வேலை

,
அந்த முதியவருக்கு நாளை 56 வது பிறந்த நாள், ஆனால் அவருக்கோ அவர் வாழ்ந்த வாழ்வில் திருப்தியே இருந்ததில்லை. ஏன் என்று கேட்டால் பணம் தான் காரணம் என்று சொல்வார்.

அவர் 1971 ஆம் ஆண்டு பொறியியல் முடித்தார் பின் LMW வில் வேலை, நல்ல சம்பளம், 1978-ல் திருமணம் (அந்த காலத்திலயே 50 சவரன் நகை போட்டு வந்தாள் மகராசி). இரண்டு மகன்கள், இன்று அவர்களுக்கும் திருமணம் முடிந்தாயிற்று. அவர்கள் கதையே வேறு (இன்று நம் கதையின் நாயகன் அந்த பெரியவர் மட்டும் தான்).

அவருக்கு இறைவன் பக்தி அதிகம், படிது முடித்த நாளிலிருந்து அவர் கடவுளிடம் பாடிய பாடல் இதுவே "கடவுளே எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ". இறைவனும் கொடுத்தார், சும்மா இல்லைங்க அப்பவே மாசம் 10000 சம்பளம், இப்போ 75000 வாங்கிட்டு இருக்கார்.

ஆனாலும் மற்ற பணக்காரர்கள் போல் BENZ Car, கெஸ்ட் ஹவுஸ் மோகம் மற்றும் பல கனவுகள் இவருக்கு ரொம்பவே அதிகம். அதனாலயே இப்ப இந்த வயசுல கடவுள திட்டிட்டு இருக்கார் பாவம்.

ஒரு நாள் இவர் கடவுளை கொஞ்சம் ஓவரா திட்டிட்டார் போலும், அந்த கடவுளே நேர்ல வந்துட்டார், வந்து இவற்கு தலைல ஒரு குட்டு குட்டி என்னை ஏன் திட்டின என்று கேட்டார். இவர் காரணத்தை சொன்னதும் மீண்டும் ஒரு குட்டு குட்டி, நீ என்னிடம் என்ன வேண்டினாய் என்று கேட்டார், இவர் சொன்னார் கடவுளே எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டினேன் என்றார், நீ கேட்டது தான் உனக்கு கிடைத்தது என்று கூறிவிட்டு அடுத்த பக்தனை பார்க்க கடவுள் சென்று விட்டார்.

நீதி: நீ என்னவாக ஆக நினைக்கிராயோ அதுவாகவே ஆவாய்.

வாசகர் கேள்வி :
வந்தது கடவுளா இல்லை அவரது ஆழ்மன என்னமா? கமெண்ட்-ல் சொல்லுங்க,
மேலும் படிக்க...

Tuesday, October 11, 2011

Powered by blogger (Attribution)-ஐ நீக்க

,
உங்கள் பிளாக்-ல் கீலே powered by blogger என்று ஒரு attribution display ஆகி கொண்டே இருக்கும் அல்லவா? இதை நீங்கள் page elements சென்று delete செய்ய முயற்ச்சிதாலும் முடியாது.

அது உங்கள் template design செய்ததுக்காக blogger-க்கு நீங்கள் கொடுக்கும் கிரெடிட் ஆகும்.

அதை எப்படி நீக்குவது என்று இப்போது பார்க்கலாம்.

என் நண்பர் ஒருவர் template-ஐ edit செய்யும் முன்பு backup எடுத்து வை என்று அடிக்கடி சொல்வார்.

அதே போல் Design->Edit Html சென்று முதலில் download full template கொடுத்து backup எடுத்து வைத்துக்கொள்ளவும். Edit பன்னும்போது ஏதாவது தவறு நேர்ந்தால் upload செய்து கொள்ளலாம்.

இப்போது அதில் ctrl+f  அழுத்தி attribution1 என்ற code-ஐ தேடவும். அதில் locked ="true" என்று இருக்கும். அதில் true என்பதை நீக்கிவிட்டு false என்பதை சேர்க்கவும்.


அவ்வளவுதான், இப்போது page elements பக்கத்திற்கு வந்து அந்த attribution-ஐ remove செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...

மதம் நல்லது

,
அந்த மத போதகர் மிகவும் ஆச்சார்யமானவர், தினமும் இரண்டு முறை குளிப்பார், நான்கு முறை கடவுளை வழிபடுவார், எந்நேரமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பார். அவர் மதத்தை மிகவும் மதிப்பவர்.

ஆனால் அவர் இதுவரை யாருக்கும் உதவியதே இல்லை. அவர் மதத்தை பற்றி யாரேனும் எதேனும் சொல்லிவிட்டால் அவ்வளவுதான் கடும் கோவம் வந்து அந்த இடத்தை விட்டு சென்று விடுவார், மற்றபடி அவர் யாரையும் கோவப்படுத்தவோ காயப்படுத்தவோ மாட்டார்.

திடீரென்று ஒருநாள் அவர் இறந்து விட்டார். கால தூதர்கள் அவரை இறைவனிடம் அழைத்து சென்றார்கள்.

அங்கு இறைவன் தன் கணக்காளனிடம் அவருடைய பாவ புண்ணிய கணக்குகளை கேட்டார், உதவியாளர் இவர் இதுவரை யாருக்கும் உதவியதே இல்லை, அதனால் இவரை நரகதுக்கு அனுப்பலாம் என்று சொன்னார்.

இதை மத போதகர் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவரை அர்ததுடன் பார்த்த கடவுள், சொர்க்கதுக்கு அனுப்ப வேண்டும் என்று உதவியாளரை பணித்தார். ஆச்சர்ய்மடைந்த உதவியாளர் கடவுளிடம் ஏன் என்று கேட்டார்.

அதற்கு கடவுள் கொடுத்த விளக்கம் இதோ:

அந்த மத போதகர் இதுவரைக்கும் எந்த நல்லதும் செய்யவில்லை அதேசமயம் யாருக்கும் எந்த கெடுதலும்  செய்யவில்லை, அவர் மத வெறியராக இருந்தாலும் மற்றவர்களை தன் மதத்தை பின்பற்ற சொல்லி வற்புறுத்தவும் இல்லை.

அந்த மனிதர் எந்த மதம் தெரியுமா? உங்கள் மதம் தான்.

நீதி: நாம் மற்றவர்களுக்கு உதவினால் மட்டும் தான் சொர்க்கம் என்றில்லை, முடிந்தவரை கெடுதல் செய்யாமல் இருப்பதும் சொற்கத்துக்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க சகோ:

அந்த காலத்தில் மனிதர்கள் பாவம் செய்வதை பார்துக்கொண்டிருந்த பெரியவர்கள்  மதம் என்பதை உருவாக்கினார்கள் அதற்கென சில கோட்பாடுகளை வைத்தார்கள். ஓரிடதில் இது நல்ல வெற்றியாக, விஷயம் நாளா பக்கமும் பரவ, அங்கங்கே மதங்கள் உருவாகின ஆனால் அதெல்லாம் மக்கள் நன்மைக்கே என்பதை நாம் உணர்ந்தால் மதம் என்ற மாயைக்கு இடமே இருக்காது.
மேலும் படிக்க...

தமிழ் கிழம் தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

,
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனக்கு சிறு வயது முதலே தமிழ்லில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல். அதன் தொடக்கம் தான் இந்த வலைத்தளம். என்னதான் தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று நான் கிளம்பினாலும், வாசகர்களாகிய உங்கள் ஆதரவு இல்லாமல் நான் ஒன்றும் சாதித்து விட முடியாது. தொடர்ந்து உங்கள் ஆதரவு இந்த கிழத்துக்கு தேவை அன்பர்களே. நன்றி

 பொதுவாக கடவுள் வாழ்த்தோடு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிப்பது நல்லது


 அதனால் இங்கே
 வாழ்க மனிதநேயம்
வளர்க ஒற்றுமை
,

அனைவருக்கும் உதவுவோம்
அன்பாய் இருப்போம்..... .
மேலும் படிக்க...
 

தமிழ்கிழம் Copyright © 2011