நேற்று Eiffel Tower-அ விக்டர் லஸ்டிக்முதல் முறை விற்ற கதையை பார்த்தோம். இன்று அவர் வாழ்க்கை வரலாற்றில் மீதத்தை பார்ப்போம்.
சென்ற முறை Eiffel Tower-ஐ விற்ற போது எதும் பிரச்சனை வராமல் போகவே, மீண்டும் ஒரு மாதம் கழித்து பாரிஸ் வந்த விக்டர் வேறு 6 பழைய இரும்புக்காரர்களை (Scrap Dealers) வரவழைத்து பேரம் பேசினார். ஆனால் இந்த முறை காவல்துறைக்கு தகவல் கசிந்ததுவிட்டது. இருப்பினும் லஸ்டிக் தப்பிவிட்டார்.
தனது 30 வயதில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தேடபட்ட முக்கிய குற்றவாளியாக இருந்த போது விக்டர் அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் தனது வேலையை ஆரம்பித்தார். அமெரிக்க அரசால் மிகவும் முக்கியமான, வேண்டப்பட்ட குற்றவாளி (Count) என்று செல்லமாக (அல்லது பகிரங்கமாக) அழைக்கப்பட்டார். அந்த சயமத்தில் Al Capone என்ற நிழலுலக தாதா-விடம் சென்று தனது அடுத்த ஏமாற்று வேலைக்காக $50000 முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 60 நாட்களில் இரட்டிப்பு பணத்தை தருவதாக வாக்களித்தார்.
அந்த Al Capone தடியனை மற்றவர்களைப்போல ஏமாற்றினால் தனது எலும்பை எண்ணிவிடுவான் என்பது நமது நாயகனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது. அதனால் அந்த பணத்தை பத்திரமாக லாக்கரில் வைத்துவிட்டு 60 நாட்கள் கழித்து தாதா-விடம் வந்து டீல் படுத்துவிட்டது என்று கூறினார். தாதா அவரின் எலும்பை முறிப்பதற்கு முன்னர் அவரின் பணத்தை அப்படியே ஒப்படைத்தார். அவரின் உன்னதனமான குணத்தை பாராட்டி Al Capone விக்டர்-க்கு (அவர் எதிர்பார்த்தபடி) $5000 பரிசாக அளித்தார்.
இத்துனை இமாலய சாதனைகள் புரிந்த நமது விக்டர் லஸ்டிக் (Victor Lustig) 1934-ஆம் ஆண்டு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றபோது அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டுக்கு கொண்டுசெல்லவேண்டிய ஒரு நாளைக்கு முன்னர் லஸ்டிக் சிறையிலிருந்து மிக புத்திசாலித்தனமாக தப்பினார். ஆனாலும் 27 நாட்கள் கழித்து Pittsburgh Pennsylvania-வில் மீண்டும் கைது செய்யப்பட்டார். December 5, 1935-இல் விக்டர் லஸ்டிக் 15-ஆண்டுகள் குற்றதிற்காகவும் 5 ஆண்டுகள் சிறையில் இருந்து தப்பியதற்காகவும் மொத்தம் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டார். March 9, 1947-இல் pneumonia-வால் தாக்கப்பட்டு 36 மணிநேரம் கழித்து தனது 57-வது வயதில் மரணமடைந்தார்.
பாவம் .... ஆசை யாரை தான் விட்டது !
நல்ல திறமையான மனிதன் தவறான வழியில் சென்று விட்டார்...
@ திண்டுக்கல் தனபாலன்
ஆமாம் சகோதரரே........
@ chinna malai
நேர் வழியில் சென்றிருந்தால் நிச்சயம் நல்ல நிர்வாகி ஆகியிருப்பார்.....:(:((:(: