Wednesday, October 12, 2011

வேலை

,
அந்த முதியவருக்கு நாளை 56 வது பிறந்த நாள், ஆனால் அவருக்கோ அவர் வாழ்ந்த வாழ்வில் திருப்தியே இருந்ததில்லை. ஏன் என்று கேட்டால் பணம் தான் காரணம் என்று சொல்வார்.

அவர் 1971 ஆம் ஆண்டு பொறியியல் முடித்தார் பின் LMW வில் வேலை, நல்ல சம்பளம், 1978-ல் திருமணம் (அந்த காலத்திலயே 50 சவரன் நகை போட்டு வந்தாள் மகராசி). இரண்டு மகன்கள், இன்று அவர்களுக்கும் திருமணம் முடிந்தாயிற்று. அவர்கள் கதையே வேறு (இன்று நம் கதையின் நாயகன் அந்த பெரியவர் மட்டும் தான்).

அவருக்கு இறைவன் பக்தி அதிகம், படிது முடித்த நாளிலிருந்து அவர் கடவுளிடம் பாடிய பாடல் இதுவே "கடவுளே எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ". இறைவனும் கொடுத்தார், சும்மா இல்லைங்க அப்பவே மாசம் 10000 சம்பளம், இப்போ 75000 வாங்கிட்டு இருக்கார்.

ஆனாலும் மற்ற பணக்காரர்கள் போல் BENZ Car, கெஸ்ட் ஹவுஸ் மோகம் மற்றும் பல கனவுகள் இவருக்கு ரொம்பவே அதிகம். அதனாலயே இப்ப இந்த வயசுல கடவுள திட்டிட்டு இருக்கார் பாவம்.

ஒரு நாள் இவர் கடவுளை கொஞ்சம் ஓவரா திட்டிட்டார் போலும், அந்த கடவுளே நேர்ல வந்துட்டார், வந்து இவற்கு தலைல ஒரு குட்டு குட்டி என்னை ஏன் திட்டின என்று கேட்டார். இவர் காரணத்தை சொன்னதும் மீண்டும் ஒரு குட்டு குட்டி, நீ என்னிடம் என்ன வேண்டினாய் என்று கேட்டார், இவர் சொன்னார் கடவுளே எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டினேன் என்றார், நீ கேட்டது தான் உனக்கு கிடைத்தது என்று கூறிவிட்டு அடுத்த பக்தனை பார்க்க கடவுள் சென்று விட்டார்.

நீதி: நீ என்னவாக ஆக நினைக்கிராயோ அதுவாகவே ஆவாய்.

வாசகர் கேள்வி :
வந்தது கடவுளா இல்லை அவரது ஆழ்மன என்னமா? கமெண்ட்-ல் சொல்லுங்க,

2 comments to “வேலை”

  • October 12, 2011 at 3:10 AM

    கடவுள் பெரிய HR தான் போல.

    delete
  • October 12, 2011 at 3:17 AM

    @prabhu krishna நன்றி சகோ ..அதனால் தான் உலகில் உள்ளவர்களை வாழ்வில் இருந்து retirement தருவது,புதிய உயிர்களை appoinment செய்வது போன்ற வேலைகளை செப்பனே செய்து வருகிறார். [ஆனால் இன்று company damage ஆகி வருகிறது (புவி வெப்பமடைதல்)ஹி ஹி ...]

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011